400 ஆவது ஆண்டு நிறைவு | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை
Description
இலங்கைத் தமிழரின், குறிப்பாக வடபகுதித் தமிழரின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு நகரம் யாழ்ப்பாணம். 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1621 ஆம் ஆண்டு, அப்போது இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைக் கைவிட்டு இன்று கோட்டை இருக்கும் பகுதிக்குத் தமது தலையிடத்தை மாற்றினர். இந்த நிகழ்வே வட இலங்கையின் முதன்மை நகரமாக யாழ்ப்பாணம் உருவானதன் தோற்றுவாய் ஆகும். இதைத் தொடர்ந்தே இப்பகுதியில் போர்த்துக்கேயரின் கோட்டையும், இன்றைய பிரதான வீதியை அண்டிய போர்த்துக்கேயர் நகரமும் உருவாகின. இவற்றை அடிப்படையாகக் கொண்டே இன்றைய யாழ்ப்பாண நகரம் வளர்ச்சியடைந்தது. எனவே வரும் 2021 ஆம் ஆண்டு யாழ் நகருக்கு 400 வயது நிறைவடைகின்றது.
இந்த நிகழ்வையொட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகள் இத்தலைப்பில் தொடராக வெளிவரவுள்ளன. இந்த இதழில் இக்கட்டுரை இவ்விடயம் தொடர்பான அறிமுகமாக வெளிவருகின்றது.